Friday 8 July 2011

`இளவேனில் காலம்'



சித்திரை மாதம் பிறந்ததுமே தமிழகத்தில் `இளவேனில் காலம்' என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. அக்காலம் தே, மா, பலா, வாழை போன்றவை செழித்துக் கொழிக்கும் காலமாகும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும்.
இதை எடுத்துக் காட்டுவதைப் போல, தமிழகத்தில் வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். சித்திரை மாதத்தில் மாம்பழங்களும் மற்றைய வசந்த காலப் பழங்களும் எங்கும் எளிதாக கிடைக்கும்.

No comments:

Post a Comment