Thursday 7 July 2011

என் பார்வையில்...

வணக்கம்.

பல அறிஞர்களின் பார்வையில் சித்திரைப் புத்தாண்டுத் தினத்தை பற்றி பார்த்தோம். அந்த வகையில், என் பார்வையில் சித்திரை மாதம் எப்படி தெரிகிறது...
 சித்திரை மாதம் எல்லா மாதங்களைப் போலவே சிறப்பான மாதமே. சித்திரைப்புத்தாண்டு என்பது இந்துகளின் புத்தாண்டு என்பதே சரியான கூற்று என்பது என் கருத்து.
அப்படியென்றால் தமிழ்ப்புத்தாண்டு எப்போது?
தமிழ்ப்புத்தாண்டு என்பது நம் தமிழர் திருநாளான பொங்கல் நாளே!. எது எப்படியிருப்பினும், நமது கலை கலைசாரத்தை, வரலாறை, பண்பாட்டினை அழியாமல் நாம் தமிழ்ப்புத்தாண்டினை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு தமிழ்ப்புத்தாண்டும் நம்மவர்களின் துன்பங்களை களையும் நல்லாண்டாக அமைய ஒற்றுமை எனும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருப்போம்.
சித்திரை வானத்தில் நட்சத்திரங்களாக மினு மினுப்போம்....
தமிழோடு ஒன்றினைந்து உயர்வோம்...

No comments:

Post a Comment