Friday 8 July 2011

சித்திரை பௌர்ணமி...

மாதந்தோறும் பெளர்ணமி வந்தாலும்இ சித்திரையில் வரும் பெளர்ணமிக்கு என்று ஒரு தனி சிறப்பு உள்ளது.‌சி‌த்ரா பவு‌ர்ண‌மி அ‌ன்று காலை‌யி‌ல் கு‌ளி‌‌த்து முடி‌த்து பூஜையறை‌யி‌ல் ‌விநாயக‌ர் பட‌த்தை நடு‌வி‌ல் வை‌த்துஇ ‌சிவனை எ‌ண்‌ணி பூ‌ஜி‌க்க வே‌ண்டு‌ம். ச‌ர்‌க்கரை‌ப் பொ‌ங்க‌ல் செ‌ய்து படை‌த்து அதனை எ‌ல்லோரு‌க்கு‌ம் அ‌ளி‌க்கலா‌ம். 


‌பழ‌ங்கால‌த்‌தி‌ல்இ சி‌த்ரா பவு‌ர்ண‌மி அ‌ன்று ஆ‌ற்ற‌ங்கரை‌யி‌ல் உற‌ல் தோ‌ண்டி அத‌ற்கு ‌திருவுற‌ல் எ‌ன்று பெய‌ர் சூ‌ட்டிஇ அ‌ங்கே இறைவனை வல‌ம் வர‌ச் செ‌ய்வா‌ர்க‌ள். ‌சி‌த்‌திரை மாத‌த்‌தி‌ல் தாராளமாக‌க் ‌கிடை‌க்கு‌ம் மா, பலா, வாழை போ‌ன்ற பழ‌ங்களை இறைவனு‌க்கு படை‌த்து பூ‌ஜி‌ப்பா‌‌ர்க‌ள்.


இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பதுதான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும்.புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்த சித்ரா பெளர்ணமியின் விஞ்ஞானப் பூர்வ உண்மை.அதிலும், உறவினர், நண்பர்கள் புடை சூழ அமர்ந்து உரையாடிஇ பாடி, மகிழ்ந்து உண்பது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம்தான்.


அன்றைய தினம் ப‌ல்வேறு கோயில்களிலும் ‌திரு‌‌விழா‌க்க‌ள் நட‌த்த‌ப்படு‌கி‌ன்றன. எ‌ங்கு‌ம் அதிகமான கூட்டம் காணப்படும். புராண‌க் கதைக‌ளி‌ன்படி, ம‌னித‌ர்க‌ளி‌ன் பாவ, புண‌ணிய‌க் கண‌க்குகளை எழுது‌ம் ‌சி‌த்ர கு‌ப்த‌ன் அவத‌ரி‌த்த நாளு‌ம் இ‌‌ன்றுதா‌ன். அவ‌ர் ‌சிவ‌ன் வடி‌த்த ‌சி‌த்‌திர‌த்தை‌க் கொ‌ண்டு உருவா‌க்‌ப்ப‌ட்டதாலு‌ம், ‌சி‌த்‌திரை மாத‌த்‌தி‌ல் ‌பிற‌ந்ததாலு‌ம் ‌சி‌த்ர கு‌ப்த‌ன் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறா‌

சித்திரை காணம்...

தையா...? சித்திரையா...?

சித்திரை சிறப்பு.....


தமிழ்நாட்டு மக்கள் சித்திரை முதல் தினத்தை ஒரு முக்கியமான பண்டிகையாக கொண்டாடுவது வழக்கம். அன்று இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். அன்று சமையலில் வேப்பம்பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் செய்யப்பட்டிருக்கும்.
 
வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. சித்திரை முதல் தினத்தன்று வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும்.
 
வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, மெழுகி, கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.
 
மஞ்சள், குங்குமம் ஆகிய  இரண்டு நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும். சித்திரை அன்று புத்தாண்டு பஞ்சாங்கம் ஒன்று வாங்க வேண்டும்.  அதற்கு சந்தனம், குங்குமம், பொருட்டு ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும்.
 
குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்ய வேண்டும். பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
 
இது தொன்றுதொட்டு தமிழகத்தில் நிகழ்ந்து வரும் வழக்கமாகும். இதனையே ஐதீகம் என்று வழங்குவர் சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பார். ஆகையால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
 
ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். தென் தமிழகத்தை சார்ந்தவர்கள் `விஷுக்கனி காணல்' என்னுமொரு சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றனர். அதாவது, சித்திரை மாதம் பிறப்பதற்கு முந்தைய  தினத்திற்கு முதல்நாள் இரவிலேயே, இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விடுவார்கள்.
 
வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், ஆபரணங்கள், பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களை தயாரித்து, ஒரு மனையின் மீது கோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைப்பர்.
 
அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைப்பர். மறுநாள் காலை அதாவது சித்திரை மாதப் பிறப்பன்று அதிகாலை முதன் முதலாக வீட்டிலேயே வயது முதிர்ந்த பெண் எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி கொள்வார்.
 
பின்பு அவர், பகவான் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார்.
 
பூஜைக்குரிய தெய்வத்தையும், புத்தாண்டு நிகழ்ச்சிக்காக பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் இனிவரும் நாட்கள் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியும் மங்கலப் பொருள்கள் செழித்தும் இருக்கும் என்பது நம்பிக்கை.
 
சித்திரை முதல் நாளன்று மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம் பெறும். உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.



`இளவேனில் காலம்'



சித்திரை மாதம் பிறந்ததுமே தமிழகத்தில் `இளவேனில் காலம்' என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. அக்காலம் தே, மா, பலா, வாழை போன்றவை செழித்துக் கொழிக்கும் காலமாகும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும்.
இதை எடுத்துக் காட்டுவதைப் போல, தமிழகத்தில் வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். சித்திரை மாதத்தில் மாம்பழங்களும் மற்றைய வசந்த காலப் பழங்களும் எங்கும் எளிதாக கிடைக்கும்.

மேல்நாடுகளில் சித்திரை புத்தாண்டு

Thursday 7 July 2011

என் பார்வையில்...

வணக்கம்.

பல அறிஞர்களின் பார்வையில் சித்திரைப் புத்தாண்டுத் தினத்தை பற்றி பார்த்தோம். அந்த வகையில், என் பார்வையில் சித்திரை மாதம் எப்படி தெரிகிறது...
 சித்திரை மாதம் எல்லா மாதங்களைப் போலவே சிறப்பான மாதமே. சித்திரைப்புத்தாண்டு என்பது இந்துகளின் புத்தாண்டு என்பதே சரியான கூற்று என்பது என் கருத்து.
அப்படியென்றால் தமிழ்ப்புத்தாண்டு எப்போது?
தமிழ்ப்புத்தாண்டு என்பது நம் தமிழர் திருநாளான பொங்கல் நாளே!. எது எப்படியிருப்பினும், நமது கலை கலைசாரத்தை, வரலாறை, பண்பாட்டினை அழியாமல் நாம் தமிழ்ப்புத்தாண்டினை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு தமிழ்ப்புத்தாண்டும் நம்மவர்களின் துன்பங்களை களையும் நல்லாண்டாக அமைய ஒற்றுமை எனும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருப்போம்.
சித்திரை வானத்தில் நட்சத்திரங்களாக மினு மினுப்போம்....
தமிழோடு ஒன்றினைந்து உயர்வோம்...

சித்திரைத் துணுக்குகள்...


சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பொருத்தமானதாகும்-
மதுரை ஆதினம்...


சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு்க்குப் பொருத்தமானதாகும்-மதுரை ஆதீனம்
சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என மதுரை ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழர்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் எல்லாம் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளாகும். இந் நாளில்தான் ஆதீனங்களிலும், திருமடாலயங்களிலும், பூஜைகள், வழிபாடுகள் சிறப்பாக நடந்தேரும்.

தமிழருக்குத் தமிழ்ப்புத்தாண்டு எது?



வ.வேம்பையன்
(அமைப்பாளர் தலை அறிவியல் மன்றம், பகுத்தறிவாளர் கழகம், கல்பாக்கம்-603102.)

(பேரறிஞர் அண்ணா இலக்கியப் பேரவை பொங்கல் விழாவில் இனமான காலவலர் கி.வீரமணி அவர்கள் தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாள்தான் என்பதை பேரவை தங்கள் கொள்கைகள் ஒன்றாக எடுத்துக்கொள்ளவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். பேரவை கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது உறுப்பினர்களுக்கு பொங்கல் நாள் தமிழ்ப்புத்தாண்டு நாள் என்று வாழ்த்து அட்டை அனுப்பிக் கொண்டிருக்கிறது) (ஆர்.)

உலகில் மாந்தர் தோன்றிய முதல் இடம் குமரிக் கண்டம். அவர்கள் பேசிய முதல் மொழி தமிழ். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்க் குடி.

தமிழ்க் குடியில் பிறந்த ஒல்காப்பெரும்புகழ்த் தொல்காப்பியர் தொன்மைச் சிறப்புக்குத் தொல்காப்பியத்தையும் வான்புகழ் வள்ளுவர் வாழ்வியல் சிறப்புக்கு வளளுவத்தையும் முத்தமிழ் முனிவர் இளங்கோ அடிகள் முத்தமிழ் சிறப்புக்குச் சிலப்பதிகாரத்தையும் இயற்றியத் தமிழுக்கும் தமிழகத்துக்கும் புகழும் பெருமையும் சேர்த்தார்கள்.

தமிழர்கள் அரசியல், பொருளியல், சமுதாயவியல், மொழியியல், கல்வி, கலை, அறிவியல், இலக்கியம், பண்பாடு, தொழில், வாணிகம், சமயம் முதலிய பல துறைகளிலும் சிறப்பாக வாழ்ந்தார்கள்.

ஆடவர், மகளில் பிறந்த நாள், நாழிகை முதலியவற்றைக் குறித்து ஒவ்வொருவருக்கும் பிறப்பியம்(ஜாதகம்) எழுதி வைத்துப் பாதுகாக்கும் பழக்கம் தமிழர்களிடம் அன்றும் இன்றும் இருந்து வருகிறது. இத்துணைச் சிறப்புகளுக்குரிய தமிழர்கள் - தனி மனித வாழ்க்கையில் தனிக் கவனம் செலுத்திய தமிழர்கள் குடும்பம், குமுகாயம்(சமுதாயம்), நாடு பற்றிய நிகழ்ச்சிகளையும் வரலாறுகளையும் தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றிற்குப் பொதுவான ஆண்டுக் கணக்கால் குறிக்கும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது பெரிதும் வருந்துதற்குரியது.

இக்குறைக்குக் காரணம் எது? யார்? தனி மனிதச் சிறப்பையும் செல்வாக்கையும் பெயரையும் புகழையும் போற்றுகின்ற அளவுக்கு மொழியையும் இனத்தையும் நாட்டையும் பொதுவாகப் பேணும் நல்ல கொள்கை தமிழர்களிடையே வேரூன்றவில்லை போலும்.

தலை நகரின் தோற்றம், பேரரசன் பிறப்பு அரசர்கள் முடி சூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த அரசர் பெயரோடு தொடர் ஆண்டு கடைப்பிடித்து வந்தனர் என்று சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் மூலம் தெரிகின்றன.

தமிழ் மொழிக்கு, தமிழ் மக்ளுக்கு, தமிழ் கூறும் நல்லுலகுக்குப் பொதுவான தொடர் ஆண்டால் காலத்தைக் கணக்கிடல் வேண்டும் என்ற கருத்து அரசர்களிடம் இல்லை என்று தோன்றுகிறது. தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் அதன் இன்றியமையாமையை அரசர்களுக்கோ மக்களுக்கோ எடுத்துக் கூறியதாகச் சான்றுகள் கிடைக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையையும் தமிழர்களிடையே மண்டிக்கிடந்த கடவுள் மதச் செல்வாக்கையும் அரசர்களிடம் பெற்றுள்ள நெருக்கத்தையும் பயன்படுத்திப் பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டு முறையைப் புகுத்திவிட்டது ஆரியம்.

அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர முறையில் இருப்பதால், 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை. அதற்கு வழங்கும் கதையோ ஆபாசமாகவே இருக்கிறது. அந்தக் கதை வருமாறு:
ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க, அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் பார்த்தார். எங்கும் அவர் இல்லாத பெண்களைக் காண முடியாததால் நாரதர் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி நான் தேவரிடம் பெண்ணாய் இருந்து சமிக்க எண்ணம் கொண்டேன் என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் 60 வருடம் கிரீடித்து அறுபது குமாரரை பெற்றார். அவர்கள் பிரபவ முதல் அட்சய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்
(அபிதான சிந்தாமணி - பக்கம் 1392)

ஆணும் ஆணும் கலவி செய்து பெற்றெடுத்த குழந்தைகள் தாம் அறுபது தமிழ் வருடங்கள். அறிவுக்கும் இது பொருந்துகிறதா? காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்து வருகிறதா? என்ற வினா எழுவது ஒருபுறம் இருக்கட்டும். இக்குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்கு முடியவில்லையே! என் செய்வது?

இந்து இழிவை எண்ணிக் கொதிப்படைந்த தந்தை பெரியார் தமிழனுக்குக் காலம் கிடையாது. ஒன்று பார்ப்பானுடையது அல்லது ஆங்கிலேயனுடையதுதான் ஆண்டாகப் பயன்படுகிறது என்று கூறுவதைத் தமிழர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இயேசு கிறித்துவை வைத்துக் கிறித்தவர்களுக்குத் தொடர் ஆண்டு உண்டு. முகமது நபியை முதலாகக் கொண்டு முசுலீம்களுக்குத் தொடர் ஆண்டு உண்டு. சாலிவாகனனை வைத்து வட மொழியாளர்களுக்குத் தொடர் ஆண்டு இருக்கிறது. புத்தர்களுக்குத் தொடர் ஆண்டு புத்தர் பெருமானை வைத்துப் போற்றப்படுகிறது. சமணர்கள் மகாவீரரை வைத்துத் தொடர் ஆண்டு பின்பற்றுகிறார்கள். மலையாளிகள் கொல்லம் தோடர் ஆண்டைக் கடைப்பிடிக்கிறார்கள். வங்காளிகளுக்கு, பார்சிகளுக்கு, யூதர்களுக்கு, சௌராட்டிரர்களுக்கு ஒவ்வொரு தொடர் ஆண்டு உண்டு.

ஆனால், ஒரு மொழி வைத்து உலகாண்ட தமிழனுக்கு, உலக முதல் மொழியாகிய தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழனுக்குத் தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றிற்குப் பொதுவான ஒருவர் பெயரில் தொடர் ஆண்டு இல்லையே!

இவற்றை எல்லாம் நன்கு உணர்ந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் இயேசு கிறித்துப் பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பேரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.
இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் காவலர் சுப்பிரமணிய பிள்ளை, சைவப் பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர். சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

பத்தன்று; நூறன்று; பன்னூறன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள்; பொங்கல் நன்னாள்

என்னும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் கருத்தும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்பதை நன்கு தெளிவு படுத்துகிறது.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம். அன்று பெரும் பொங்கல். பொங்கல் நாளன்று புத்தாண்டு தொடங்குவதால் பொங்கல் புத்தாண்டு என்று போற்றிப் பின்பற்றப்படுகிறது.

தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டு முறை என்பது தை மாதத்தை முதல் மாதமாகவும் மார்கழியை இறுதி மாதமாகவும் வழக்கில் உள்ள கிழமைகளையும் கொண்டது. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள்.

திருவள்ளுவர் காலம் கி.மு.31. எனவே, திருவள்ளுவர் அண்டு கண்டுபிடிக்க ஆங்கில ஆண்டுடன் 31ஐ கூட்டல் வேண்டும். 1892+21=2023.

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ் நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் திராவிடர் கொண்டாட வேண்டிய நாள்கள் பற்றிய விவரத்தை 29.12.1945 நாளிட்ட குடியரசு இதழில் வெளியிட்டுள்ளார். அதில் பொங்கல் புத்தாண்டு நாள் என்றே குறிப்பிட்டுள்ளார்.

உலகில் உள்ள நாடுகள் 269 உலக நாடுகள் மன்றத்தில் (யு.என்.ஓ) சேர்ந்துள்ள நாடுகள் 175 தமிழ் இன மக்கள் வாழ்கின்ற நாடுகள் 72. இவர்களின் தொகை ஏறத்தாழப் பதின்மூன்று கோடி.

72 நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் பொங்கல் இடும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு நாள் என்று பின்பற்றுகின்றனர்.

தமிழ் நாட்டில் தமிழ் இனத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ்ப் புலவர்கள் முதலிய அனைவரும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று ஏற்றுப் போற்றி வருகிறார்கள்.

புலவர்கள், அறிஞர்கள், முனைவர்கள், சான்றோர்கள் என்று 49 பெருமக்களைக் கொண்டு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் அமைத்துள்ள தமிழகப் புலவர் குழுவும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்ற முடிவு செய்து வழக்கில் கைக்கொள்ளுமாறு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் மலையாளம் மறைமலை அடிகள் நிறுவிய தனித் தமிழ் இயக்கத்தினரும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துள்ள உலகத் தமிழ்க் கழகத்தினரும் தை முதல் நாள் என்றே பின்பற்றியும் பரப்பியும் வருகிறார்கள்.

தமிழ் நாள், கிழமை, மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இதழ்கள், நினைவு மலர்கள் தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டை வெளியிட்டும் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று கைக் கொண்டும் பரப்பியும் வருகின்றன.

தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை மேலும் மேலும் வளர்ப்பதன் மூலம் உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் இடம் பெற்று வரும் தமிழினக் காவலர் மானமிகு வீரமணி அவர்கள் 14.01.1990 ஆம் நாள் சென்னை பெரியார் திடலில் நடந்த பொங்கல் புத்தாண்டு விழாவில்,
தமிழ்ப் புத்தாண்டு என்பது பொங்கல் முதல் நாள்தான் என்பதை இனிமேல் நாம் ஒரு பண்பாட்டு இயக்கமாகத் தொடங்க இருக்கிறோம். தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சம்பந்தப்பட்ட அனைத்து அறிஞர் பெருமக்களுக்கும் மிகுந்த கனிவான ஒரு வேண்டுகோளாகத் திராவிடர் கழகம் வைக்க விழைகிறது.

ஒரு நாட்டில் ஒரு முறையைப் பெருவாரியான மக்கள் கைக்கொள்வார்களானால் அதனைச் சட்ட சம்மதமாக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்று உலகில் 72 நாடுகளில் வாழ்கின்ற 13 கோடி தமிழ் மக்களின் இதயத்தை ஆள்கின்ற மாமன்னன் நம் அண்ணா கூறியுள்ளார்.